Wednesday, November 30, 2016

திருமலைக் கொடுமைகள் 1985 - ஒரு துன்பியல் ஆவணம்



2003 ஆம் ஆண்டின் நடுப்பகுதியது. விடுமுறை முடிந்து மீள பல்கலைக்கழகம் செல்வதற்கான பயணநாள். வீடு பிரிந்து செல்லும் அன்றைய பயணம் பெரும் சலிப்பைத் தருவதாக இருக்கும் என்ற எண்ணமே மனச்சோர்வைத் தந்தது. என்ன செய்வது நெருங்கி வரும் பரீட்சைகள் பற்றிய பயம் பின்னால் இருந்து உந்தித்தள்ள அரைமனதோடு அதிகாலை வேளையிலேயே பயணப்பொதிகளுடன் புறப்பட ஆயத்தமானேன்.

Monday, November 28, 2016

ஈழ , சோழ மண்டல பேச்சுத்தமிழ் (1941) - சுவாமி விபுலானந்தர்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சுவாமி விபுலாநந்தர் பிறந்தார். 1912ஆம் ஆண்டுகளில் பயிற்றப்பட்ட ஆசிரியராகக் கடமைபுரிந்த இவர் 1915 ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 இல் அறிவியலில் பட்டத்தைப் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார்.

Tuesday, November 08, 2016

தம்பலகாமம் கள்ளிமேட்டு 'நடுகல்' - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமுகத்தின் தொல்மரபுகள் பல அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கிராமங்களில் இதுவுமொன்று. இலங்கையில் ஐரோப்பியரின் மேலாதிக்கம் ஏற்படுவதற்கு முன்னர் இன்றைய தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய்ப் பிரதேச செயலாளர் பிரிவுகள் மூன்றையும் உள்ளடக்கிய பிரதேசம் “ தம்பலகாமப் பற்று” எனும் சுயாட்சி அதிகாரமுள்ள வன்னிச் சிற்றரசராக இருந்தது.

Monday, November 07, 2016

" கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " - வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு


வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் எழுதிய திருகோணமலை மாவட்டத்தின் புராதன தொன்மைகளை வெளிப்படுத்துகின்ற " கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " என்னும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு 12- 11- 2௦16 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு Jesuit ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Tuesday, November 01, 2016

'நாங்கள் விட்டில்கள் அல்ல' கவிதை நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மு.செளந்தரராஜன் அவர்கள், மறைந்த தனது சகோதரர் கவிஞர் பரஞ்சோதி அவர்கள் வாழும் காலத்தில் எழுதிய கவிதைகளினை தற்போது தொகுத்து 'நாங்கள் விட்டில்கள் அல்ல' எனும் கவிதை நூலினை தயார் செய்திருந்தார். இந்த கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி கேட்போர் கூடத்தில் 22.10.2016 சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு இடம்பெற்றது.