Saturday, January 31, 2009

நன்றி மீண்டும் சந்திப்போம்.....

குருசேத்திரம்
குருதியும்,தசையும் சகதியாய் குவிந்து கிடக்கிறது என் தேசம். பத்து வயதில் என் பாட்டனார் {கதைசொல்லி} கைபிடித்து அழைத்துச் சென்றிருக்கிறார் குருசேத்திரம். இரத்தமுறைந்து நடுங்கிக்கொண்டே நாற்புறமும் பார்த்தவண்ணம் அவருடன் நடந்த ஞாபகங்கள் நிழலாடிமறைகிறது இப்போது.

Friday, January 30, 2009

உயிர் உருக்கும் நினைவுகள்

கவிதை
வருத்தம் வரக்கூடாது
அம்மா இல்லாத ஊரில்
நானிருக்கும் போது

Wednesday, January 28, 2009

சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் ....



நீ
புன்னகைக்கும் போதெல்லாம் –என்னுள்
புதுரெத்தம் பாய்கிறது
உண்மையைச் சொல்
செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
சிரிப்பதற்கா? அல்லதெனைச்
சிலிர்ப்பூட்டுவதற்கா?

Friday, January 23, 2009

ஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009

திருமலை
வாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது.
வழிபடத் தயாரென்றால் வாருங்கள், திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். அல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம். முதலில் விநாயக வணக்கம்.

Sunday, January 18, 2009

தம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009

திருமலை
திருமலை
திருமலை திருமலைதிருமலைதிருமலைதிருமலைதிருமலைதிருமலைதிருமலை
திருமலை
திருமலை
தம்பலகாமம் பற்றிய மேலதிக தகவல்களும், படங்களும் கீழுள்ள பதிவில்....



Saturday, January 10, 2009

என் கல்விக்கூடங்கள் -1, தம்பலகாமம்..


பாடசாலை நாட்கள் பற்றிய நினைவுகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை, திரும்பிப்பார்க்கையில் எப்போதுமே உற்சாகம் தருபவை. எனது ஆரம்பப் பாடசாலை தம்பலகாமம் சாரதா வித்தியாலயம் என்றாலும் அதற்கு முன்பே பாடசாலைக்கும் எனக்குமான உறவு ஆரம்பித்திருந்தது. இது எல்லா வாத்தியார்களின் பிள்ளைகளுக்கும் வாய்த்திருக்கும் என நினைக்கிறேன். அப்படி அப்பாவுடன் நான் சென்றபாடசாலைகள் பாலம்போட்டாறு சித்திவிநாயகர், முன்மாதிரித்திடல்அ.த.க பாடசாலை என்பனவாகும். 

Thursday, January 01, 2009

சுதந்திரம்....


விழிபிதுங்கி இருக்கிறேன்
என் எண்ணங்களை
எழுத்துருவாக்கும் வழி தெரியாது