Wednesday, June 17, 2009

கனவுதேசம்....


நிலவொளியில் நீயும், நானும்
சேர்ந்து நடக்கையில் - இது
கனவுதேசம் என்றலவோ
கருதத் தோன்றுது

பசுந்தறையில் அமர்ந்து நீயும்
பாட்டுப்பாடையில் - சுற்றி
மரத்தில் இருந்து
ரசிக்கிறது குயிலினங்களே

பனி விழும் பாதைதனில்
பயணம் செல்கையில் - நீ
இறுக்கிப் பிடித்த கைவழியே
என்னிதயம் உறையுதே

உரசிச்செல்லும் உந்தன்விழி
தீயை மூட்டுதே - அதிலென்
உணர்வுங் கொஞ்சம்
கள்ளமாக குளிர்காயுதே

புரியவில்லை இந்த சுகம்
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

17 comments:

  1. அருமை, பகிர்விற்க்கு நன்றி பாஸ்!!

    ReplyDelete
  2. கவிதை நன்றாக உள்ளது அண்ணா.

    ReplyDelete
  3. நன்றி வம்பு விஜய்

    ReplyDelete
  4. நன்றி கலையரசன்

    ReplyDelete
  5. Lavasuthan SivalingamJun 17, 2009, 10:02:00 PM

    nce lyrics sir.... :)

    ReplyDelete
  6. நல்ல கவிதை.
    "..உரசிச்செல்லும் உந்தன்விழி
    தீயை மூட்டுதே - அதிலென்
    உணர்வுங் கொஞ்சம்.."
    மனசோடு பேசும் வார்த்தைகள்

    ReplyDelete
  7. ""அதிலென்
    உணர்வுங் கொஞ்சம்
    கள்ளமாக குளிர்காயுதே

    புரியவில்லை இந்த சுகம்
    புதுமையானதே - என்றும்
    புரிந்து கொண்டு
    வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே""


    உங்கள் கவிவரிகள் உண்மை உணர்வுகளின் ஆழம்
    உங்களை வாழ்த்தும் அளவுக்கு நானில்லை
    என்றாலும் உங்கள் கவி ரசித்தவனாக வாழ்த்துகின்றேன்

    அன்புடன் கரவைக்குரல்

    ReplyDelete
  8. நன்றி யாழினி

    ReplyDelete
  9. கவிதை வரிகள் இனிமையாக இருக்கின்றன; ஆனால் எமது தேசத்தில் இனிமேல் இந்த வகையான பசுமையான இடங்களும், இனிமையாக சுதந்திரமாக காதலுடன் நடமாட மனங்களும் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. நன்றி Lavasuthan Sivalingam

    ReplyDelete
  11. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
    அவர்களே

    ReplyDelete
  12. "புரியவில்லை இந்த சுகம்
    புதுமையானதே - என்றும்
    புரிந்து கொண்டு
    வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே"
    கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நன்றி கரவைக்குரல்
    உங்கள் அன்பிற்கு

    ReplyDelete
  14. /// எமது தேசத்தில் இனிமேல் இந்த வகையான பசுமையான இடங்களும், இனிமையாக சுதந்திரமாக காதலுடன் நடமாட மனங்களும் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.///

    கனவுதேசம்
    நன்றி Swathi Swamy அவர்களே

    ReplyDelete
  15. நன்றி Renuka Srinivasan

    ReplyDelete