
நிலவொளியில் நீயும், நானும்
சேர்ந்து நடக்கையில் - இது
கனவுதேசம் என்றலவோ
கருதத் தோன்றுது
பசுந்தறையில் அமர்ந்து நீயும்
பாட்டுப்பாடையில் - சுற்றி
மரத்தில் இருந்து
ரசிக்கிறது குயிலினங்களே
பனி விழும் பாதைதனில்
பயணம் செல்கையில் - நீ
இறுக்கிப் பிடித்த கைவழியே
என்னிதயம் உறையுதே
உரசிச்செல்லும் உந்தன்விழி
தீயை மூட்டுதே - அதிலென்
உணர்வுங் கொஞ்சம்
கள்ளமாக குளிர்காயுதே
புரியவில்லை இந்த சுகம்
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே
த.ஜீவராஜ்
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
ReplyDeleteஉங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
- வம்பு விஜய்
அருமை, பகிர்விற்க்கு நன்றி பாஸ்!!
ReplyDelete:-?
ReplyDeleteகவிதை நன்றாக உள்ளது அண்ணா.
ReplyDeleteநன்றி வம்பு விஜய்
ReplyDeleteநன்றி கலையரசன்
ReplyDeletence lyrics sir.... :)
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDelete"..உரசிச்செல்லும் உந்தன்விழி
தீயை மூட்டுதே - அதிலென்
உணர்வுங் கொஞ்சம்.."
மனசோடு பேசும் வார்த்தைகள்
""அதிலென்
ReplyDeleteஉணர்வுங் கொஞ்சம்
கள்ளமாக குளிர்காயுதே
புரியவில்லை இந்த சுகம்
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே""
உங்கள் கவிவரிகள் உண்மை உணர்வுகளின் ஆழம்
உங்களை வாழ்த்தும் அளவுக்கு நானில்லை
என்றாலும் உங்கள் கவி ரசித்தவனாக வாழ்த்துகின்றேன்
அன்புடன் கரவைக்குரல்
நன்றி யாழினி
ReplyDeleteகவிதை வரிகள் இனிமையாக இருக்கின்றன; ஆனால் எமது தேசத்தில் இனிமேல் இந்த வகையான பசுமையான இடங்களும், இனிமையாக சுதந்திரமாக காதலுடன் நடமாட மனங்களும் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி Lavasuthan Sivalingam
ReplyDeleteநன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
ReplyDeleteஅவர்களே
"புரியவில்லை இந்த சுகம்
ReplyDeleteபுதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே"
கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்
நன்றி கரவைக்குரல்
ReplyDeleteஉங்கள் அன்பிற்கு
/// எமது தேசத்தில் இனிமேல் இந்த வகையான பசுமையான இடங்களும், இனிமையாக சுதந்திரமாக காதலுடன் நடமாட மனங்களும் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.///
ReplyDeleteகனவுதேசம்
நன்றி Swathi Swamy அவர்களே
நன்றி Renuka Srinivasan
ReplyDeleteஅட, கவிதை :)
ReplyDelete