Thursday, May 28, 2009

முடியலையே....!


தனித்திருந்த வாழ்க்கையது
கசத்திருந்த நாளொன்றில்
கண்ணெதிரே கண்டேன்
அந்தக் கள்ளியை - என்
நெஞ்சத்தைத் கொள்ளைகொண்ட
அன்புச் செல்வியை


தனியாகச் சிரித்ததில்லை
தலையணை மறந்ததில்லை
என்னவோ ஆச்சு எனக்கு
எங்கேயோ போச்சு மனது - ஆகா
நண்பர்கள் பட்ட துன்பம்
நான்படலானேனே இப்போது

உடுப்பது எடுக்கச் சென்றால்
உணவது அருந்தச் சென்றால்
தனியாகச் சிரித்துக்கொண்டேன்
கேட்டால் வெடுக்கென்று
முறைத்துக் கொண்டேன் -ஐயோ
இப்படி மாறிப்போனேனே

வாழ்க்கையின் வசந்தமிது
வந்தது எனக்குமிப்போ
கவிதைகளால் எல்லாம்
சொல்லத் தெரியலையே! - என்
கனவெல்லாம்
கீறிக் காட்டிட முடியலையே!
த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

9 comments:

  1. நல்ல சகோதரனாய்,

    நல்ல நண்பனாய்

    Wish you all the best

    ReplyDelete
  2. thanks ஜுர்கேன் க்ருகேர்.....

    ReplyDelete
  3. நன்றி கவிக்கிழவன் அவர்களே

    ReplyDelete
  4. "வாழ்க்கையின் வசந்தமிது வந்தது எனக்குமிப்போ
    கவிதைகளால் எல்லாம் சொல்லத் தெரியலையே! "

    சொல்லத் தெரியா விட்டாலும் இயற்கையாக இருக்கிறது உங்கள் காதல் கவிதை. வந்து விட்ட வாழ்க்கையின் வசந்தத்தை நிறைவுடன் அனுபவிக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. நன்றி வா(வ)ரம் - புது இணைய இதழ்

    ReplyDelete
  6. நன்றி Renuka Srinivasan

    ReplyDelete
  7. நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

    ReplyDelete