Tuesday, October 07, 2008

நினைவுகளில் போராட்டம்...



ஞாயிற்றுக் கிழமை
மழைபொழியும் மாதம்
ஊசிகுத்தும் குளிர்
உடம்பை மூடிய
தடித்த போர்வை
இறுக்கி மூடிய
என்னறைக் கதவுகள்
கண்ணுக்குள்
உறக்கமும், விழிப்பும்
நெஞ்சுக்குள்
இன்றைக்கு ஒதுக்கி வைத்த
நேற்றைய வேலைகள்
நினைவுகளில் போராட்டம்
எழும்புவதா ?
இன்னும் கொஞ்சம்
படுப்பதா ?
 த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. "இறுக்கி மூடிய
    என்னறைக் கதவுகள்"
    வரிகளை ரசித்தேன்.

    ReplyDelete
  2. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
    அவர்களே

    ReplyDelete