Tuesday, July 12, 2016

சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்


 சுவிட்சிலாந்து சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒருதொகுதி  விளையாட்டு உபகரணங்கள்  தம்பலகாமத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

சொய்லியம்ற் தமிழ் மன்றம் சுவிட்சிலாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் உள்ள Affoltern am Alibis  எனும் இடத்தினை அண்டியுள்ள சிறிய கிராமங்களில் வாழும் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு அங்கு வாழும் அவர்களின் பிள்ளைகளின் கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதோடு 2010 முதல் தாயக மக்களின் சமூக நலன் மேம்பாட்டிற்காகவும் செயற்பட்டு வருகின்றது. அந்த அடிப்படையில் அவ்வமைப்பினரால் ஒருதொகுதி  விளையாட்டு உபகரணங்கள்  தம்பலகாமத்திலுள்ள ஆறு விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நன்கொடையாளர்கள் சார்பில் திரு.இ.முகுந்தன் (உணவு, ஔடத பரிசோதகர்) , திரு.இராமச்சந்திரன்  ஆகியோர் கலந்து கொண்டனர். தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு.குணபாலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் Dr.விக்னராஜா (ஆரம்ப சுகாதார நிலையம் - மணற்சேனை), திரு.இராஜசிங்கம் ( கிராம சேவை அதிகாரி)  ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்
    ஐயா
    எம் உறவுகளுக்கு சேவை தொடரட்டும் நிகழ்வை மிக அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete