Tuesday, January 06, 2015

கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்


தம்பலகாமம் சாரதா வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு தரம் ஒன்றில் புதிதாக இணையவுள்ள பிள்ளைகளுக்கு தம்பலகாமம் நாமகள் சன சமூக நிலைத்தினூடாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் தம்பலகாமம் பொது நூலக மண்டபத்தில் கடந்த 02.01.2015 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப.10.00 மணியளவில் திரு.மு.நடேசலிங்கம் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
திருகோணமலை உள்ளுராட்சி நூலக அபிவிருத்தி அதிகாரி செல்வி.முத்துக்குமார், தம்பலகாமம் பிரதேச சபை அதிகாரி திரு.செந்தூரன், கலாபூசணம் வே.தங்கராசா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பெற்றாருடன் கலந்துகொண்ட 25 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
  


கலாபூசணம் வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2015/01/5.html

    முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete
  2. அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..

    நட்புடன் ஜீவன்.

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.
    தங்களின் சேவையை நேரில் வாழ்த்த முடியாமல் உள்ளது கடலும் தூரமும் தற்போது நம்மை பிரித்து வைத்திருக்கிறது.... எப்போது ஒரு நாள் சந்திக்கலாம்... நிகழ்வை நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு... அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.

    ReplyDelete