Thursday, December 04, 2008

தொடரும் பயணம்......

கவிதை
எப்போதாரம்பித்தது
என்பயணமென்பது
இப்போதும் தெரியாதெனக்கு


பயணம் தொடர்கிறது
பாதைகள் சிரமமானவை
சிராய்ப்புக் காயங்கள் ஏராளம்
முட்டிமோதல்கள் தாராளம்

என்ன செய்ய
கைபிடித்தழைத்துச் செல்ல யாருமில்லை
குற்றமில்லை
அவரவர்க்கு அவரவர்பாதை
எப்போதாவது
ஆறுதல்ப்படுத்தும் வார்த்தைகள்

இளைப்பாறும் போதெல்லாம்
எனக்குள்ளே வெறுப்பு
ஏற்கனவே நடந்ததை நினைத்து
எத்தனையோ முறை
ஒரேமாதிரியான விழுதல்கள்
முட்டாள் நான்
புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு
வீண்விவாத விலகல்
நேரந்தவறாமை, நினைவுநல்லது
இன்னும் எத்தனையோவெல்லாம்
என் நெஞ்சோடு
நின்று கொண்டது
எதையுமே செயலில் காட்ட
முடியவில்லையே என்ற ஏக்கம்

ஏக்கம், துக்கம்
ஏனிந்த வாழ்வென்ற எரிச்சல்
இதற்கப்பாலும் எதோவோர்
பிடிமானம் வாழ்வில்
இருக்கத்தான் செய்கிறது

இதுவரை கிட்டவில்லை
தேடலின் முடிவு
இதுவும் நல்லதுதான்
இல்லையெனில் - என்
இறுதிப்பயணம்வரை
இதேபாதையில் இப்போதுபோலவே
முட்டிமோதிட முடியாதல்லவா?
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

7 comments:

  1. /எப்போதாரம்பித்தது
    என்பயணமென்பது
    இப்போதும் தெரியாதெனக்கு

    பயணம் தொடர்கிறது
    பாதைகள் சிரமமானவை
    சிராய்ப்புக் காயங்கள் ஏராளம்
    முட்டிமோதல்கள் தாராளம்

    என்ன செய்ய
    கைபிடித்தழைத்துச் செல்ல யாருமில்லை
    குற்றமில்லை
    அவரவர்க்கு அவரவர்பாதை
    எப்போதாவது
    ஆறுதல்ப்படுத்தும் வார்த்தைகள்


    இளைப்பாறும் போதெல்லாம்
    எனக்குள்ளே வெறுப்பு
    ஏற்கனவே நடந்ததை நினைத்து
    எத்தனையோ முறை
    ஒரேமாதிரியான விழுதல்கள்
    முட்டாள் நான்
    புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு
    வீண்விவாத விலகல்
    நேரந்தவறாமை, நினைவுநல்லது
    இன்னும் எத்தனையோவெல்லாம்
    என் நெஞ்சோடு
    நின்று கொண்டது
    எதையுமே செயலில் காட்ட
    முடியவில்லையே என்ற ஏக்கம்

    ஏக்கம், துக்கம்
    ஏனிந்த வாழ்வென்ற எரிச்சல்
    இதற்கப்பாலும் எதோவோர்
    பிடிமானம் வாழ்வில்
    இருக்கத்தான் செய்கிறது


    இதுவரை கிட்டவில்லை
    தேடலின் முடிவு
    இதுவும் நல்லதுதான்
    இல்லையெனில் - என்
    இறுதிப்பயணம்வரை
    இதேபாதையில் இப்போதுபோலவே
    முட்டிமோதிட முடியாதல்லவா?/

    மொத்தமும் அருமை
    சொல்ல வார்த்தை இல்லை

    ReplyDelete
  2. நன்றி திகழ்மிளிர்உங்கள் வாழ்த்துரைகள் மனமகிழ்வைத் தருகிறது

    ReplyDelete
  3. \\
    இதுவரை கிட்டவில்லை
    தேடலின் முடிவு
    இதுவும் நல்லதுதான்
    இல்லையெனில் - என்
    இறுதிப்பயணம்வரை
    இதேபாதையில் இப்போதுபோலவே
    முட்டிமோதிட முடியாதல்லவா?/
    \\

    ஏன்...

    ReplyDelete
  4. ///ஏன்...///
    King...

    தெரியவில்லை அரசே

    ReplyDelete
  5. arpudamana kavadai,kavadiku nandri anbudan seelaninfo

    ReplyDelete
  6. ரேணுகா ஸ்ரீநிவாசன்Jul 17, 2009, 3:49:00 PM

    விழுதலும் எழுதலும் வாழ்க்கையின் நியதி. எந்தக் குழந்தையும் விழாமல் நடப்பதில்லை. ஒவ்வொரு முறை விழும் போதும் பெறுவது புதியதோர் படிப்பினை. முன்னேற வேண்டும் என்ற வேகமும் விடாமுயற்சியும் உங்கள் பயணத்தை உறுதியாக்கும்! மனம் தளராமல் தொடர்ந்து செல்லுங்கள்! வரப்போகும் வெற்றிகளிற்கு இப்போதே வாழ்த்துக்கள்!

    ReplyDelete