Tuesday, December 02, 2008

மீளும் நினைவுகள்

மீளும் நினைவுகள்
எப்போதும் போலவே
சந்திப்புக்கள் சத்தத்தோடும்
பிரிவுகள் மௌனத்தோடும்
அரங்கேறிப்போனதன்றும்


யன்னலுக்கு வெளியே
யுத்தத்தின் கோரம்
பேரூந்துள் நம்மிடையே
உணர்வுகளில் ஈரம்

சொல்ல நினைத்தவைகள்
இதயத்தின் ஏதாவோர் மூலையில்
எழமுடியாத ஆழத்தில்
எப்படியோ சிக்கிக்கொள்ள
பொறுக்கியெடுத்த சில
வார்த்தைகளே போதுமாய் இருந்தது
அப்போதுநாம் பேசிக்கொள்ள

பேசுபொருட்களெல்லாம்
பெறப்பட்டவைகளாக
நம்மைப் பொறுத்தமட்டில்
பெறுமதியற்றவைகளாக இருக்க
பேசவேண்டிய வார்த்தைகள்
காற்றாகி கடைசியில் {பெரு} மூச்சாகி
பேச்சின் இடையிடையே வந்து போனது.

இறுதிவரை நம்
இதயத்துண்ர்வுகள் பற்றி
எச்சரிக்கையாகவே இருந்தோம்
விடைபெறும் வரை
விதி நம் ‘நா’ விற்கு
விலங்கிட்டிருந்தது

இப்போது கிடைத்தாலும்
ஏறிப்பார்க்கிறேன்
அந்த வழிப் பேரூந்தில்
மணமுறிவு பெற்ற நம்மை
மூன்றுமணிநேரம் ஒருமித்து
உட்காரவைத்த கர்வத்தோடு
உருக்குலையாமல் இருக்கும் அதன்
இருக்கைகளை ஒருதரம்………….
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

11 comments:

  1. /எப்போதும் போலவே
    சந்திப்புக்கள் சத்தத்தோடும்
    பிரிவுகள் மௌனத்தோடும்
    அரங்கேறிப்போனதன்றும்/

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. //அருமையான வரிகள்//

    நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  3. //சொல்ல நினைத்தவைகள்
    இதயத்தின் ஏதாவோர் மூலையில்
    எழமுடியாத ஆழத்தில்
    எப்படியோ சிக்கிக்கொள்ள
    பொறுக்கியெடுத்த சில
    வார்த்தைகளே போதுமாய் இருந்தது
    அப்போதுநாம் பேசிக்கொள்ள//

    அடிக்கடி இப்படி ஆவதுண்டு.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  4. நன்றி அருணா

    ReplyDelete
  5. அனுபவத் தெறிப்பில் கவிதைகள் சடாரென்று
    தைத்துவிடும். வலிகள் நிரைந்த வரிகள் இன்னுமமதிக
    வேகத்துடன். நல்ல கவிதை

    ReplyDelete
  6. நன்றி காமராஜ் அவர்களே
    உங்கள் வருகையும் பாராட்டும் மகிழ்ச்சி தருகிறது...

    ReplyDelete
  7. //விடைபெறும் வரை
    விதி நம் ‘நா’ விற்கு
    விலங்கிட்டிருந்தது
    ///


    என்றுமே விதியை வெல்வது கடினம்தான் ஐயா

    ReplyDelete
  8. நன்றி SUREஷ் அவர்களே

    ReplyDelete
  9. //இப்போது கிடைத்தாலும்
    ஏறிப்பார்க்கிறேன்
    அந்த வழிப் பேரூந்தில்
    மணமுறிவு பெற்ற நம்மை
    மூன்றுமணிநேரம் ஒருமித்து
    உட்காரவைத்த கர்வத்தோடு
    உருக்குலையாமல் இருக்கும் அதன்
    இருக்கைகளை ஒருதரம்...//

    பிரிவின் துயர் வாட்டும் வரிகளாக மனதில் தைக்கின்றன.

    ReplyDelete
  10. //இப்போது கிடைத்தாலும்
    ஏறிப்பார்க்கிறேன்
    அந்த வழிப் பேரூந்தில்
    மணமுறிவு பெற்ற நம்மை
    மூன்றுமணிநேரம் ஒருமித்து
    உட்காரவைத்த கர்வத்தோடு
    உருக்குலையாமல் இருக்கும் அதன்
    இருக்கைகளை ஒருதரம்...//

    பிரிவின் துயர் வாட்டும் வரிகளாக மனதில் தைக்கின்றன.

    ReplyDelete
  11. நன்றி மாதவராஜ் அவர்களே

    ReplyDelete