Tuesday, December 09, 2008

உலகம் புரியும்

கவிதை
அரக்கன் என்பவன்
அடுத்தவனல்ல –நம்
அகத்துள் இருப்பவன்


இடுக்கண் தருபவன்
இறைவனல்ல –நம்
இதயத்துணர்வுகள்.

புரிந்துகொண்டால்
வெற்றியும்,தோல்வியும்
வேறொருவர் வசமில்லை
வீண்பழி சொல்ல

வந்து போவதற்கு
துன்பமும், இன்பமும்
தூரத்தில் இல்லை
நம்மோடுதான்

விழித்தால்தான்
உறக்கம் கலையும்
அடிபட்டல்தான்
அனுபவம் கிடைக்கும்-உன்னை
உணர்ந்தால்தான்
உலகம் புரியும்.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

9 comments:

  1. அருமை ஜீவா.

    மனதைக் கணிக்கும்
    மானியொன்று
    மானிடருக்கு கிடைத்து விட்டால்
    மனிதம் தேடும்
    உலகம் புரியும்!

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி
    இப்படைப்பை
    எனது இணயத்தில்
    இனைக்கலாமா நன்றியுடன்

    ReplyDelete
  3. //இடுக்கண் தருபவன்
    இறைவனல்ல –நம்
    இதயத்துணர்வுகள்.// மிகச் சரி. இதைப் புரிந்து கொள்ளவும் நம் இதயத்துக்கு எல்லாம் வல்ல இறைவன் சக்தியைத் தருவாராக:)!. //புரிந்துகொண்டால்
    வெற்றியும்,தோல்வியும்
    வேறொருவர் வசமில்லை
    வீண்பழி சொல்ல// மிக மிகச் சரி. தீதும் நன்றும் பிறர் தர வாரா. //விழித்தால்தான்
    உறக்கம் கலையும்
    அடிபட்டல்தான்
    அனுபவம் கிடைக்கும்//அடித்துச் சொல்லியிருக்கிறீர்கள். அற்புதம்.வாழ்த்துக்கள்!------------------------------------------------ அன்புடன்ராமல்க்ஷ்மி

    ReplyDelete
  4. உண்மைதான் நன்றி ஈழவன்

    ReplyDelete
  5. நன்றி naganathan
    உங்கள் வருகைக்கும் பகிர்விர்க்கும்
    தாராளமாக இணைக்கலாம்...

    ReplyDelete
  6. நன்றி ராமல்க்ஷ்மி அவர்களே
    உங்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுவதற்கான உற்சாகத்தை தருகிறது..

    ReplyDelete