Wednesday, January 28, 2009

சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் ....



நீ
புன்னகைக்கும் போதெல்லாம் –என்னுள்
புதுரெத்தம் பாய்கிறது
உண்மையைச் சொல்
செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
சிரிப்பதற்கா? அல்லதெனைச்
சிலிர்ப்பூட்டுவதற்கா?


தினமும் எழுந்து
சிந்திக்கிறேன் பெண்ணே –உன்
சிரிப்புக்குவமைகளை
கடைசியில் என்னையே நான்
நிந்தித்துக்கொள்கிறேன்
வராத வார்த்தைகளுக்காய்

நிட்சயமாய்ச் சொல்வேன்
நீதானெனக்குச்
சிரிக்கக் கற்றுக்கொடுத்தவள் –என்
வாழ்வின் மனஇறுக்கங்களால்
தோன்றிய வேதனைகளுக்கு நீ
மரண தேவதை

அதுவோர் காலங் கண்ணே
எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான்மட்டும்
இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
புன்னகைப் பொற்கரங்கள்
என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை

நினைத்துப் பார்க்கிறேன்-நாம்
பேசிக்கொண்டதைவிட
பிரியமாகச் சிரித்துக்கொண்ட
பொழுதுகள் ஏராளம் ஒருவேளை
முறைத்துக் கொண்டால்கூட
அதுயார் முதலில்
சிரித்துக்கொள்வதென்பதற்காகவே
இருந்திருக்கும்.

விலகிப் போனபின்னும்
நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன் என்
சின்ன இதயத்தில்
என்றாவதொருநாள் நினைத்து
எனக்குள் நானே
சிரித்துக் கொள்வதற்காய்.


த.ஜீவராஜ்




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

26 comments:

  1. சிரிப்பின் செல்லக் குழந்தையான எனக்கு உங்கள் சிரிப்புக் கவிதை மிகவும்
    பிடித்திருக்கிறது ஜீவன்!
    நன்றி!
    ---------------------------------------------------------------------------­------------------------
    இதோ என் கிறுக்கல் ஒன்றை நீங்கள் ரசிக்கலாமே?


    சிரித்துப் பார்த்தேன்
    கண்ணாடிமுன் நின்று,
    என்னைப் பிடித்தது எனக்கு!
    நீ சிரிப்பதைப் பார்த்தபோது
    உன்னைப் பிடித்தது எனக்கு!
    இப்போது....
    என்னை வெறுத்து,
    உன்னையே நினைக்கும்போது
    உருவாகும் சிரிப்பில்
    உலகையே மறக்கிறேன்!

    ReplyDelete
  2. நினைத்து சிரிக்கும்பொருட்டு தவறேயில்லை, நினைத்து அழும் பொருட்டு
    நினைக்காமலிருப்பதே மேல்.

    ReplyDelete
  3. விலகிப் போனபின்னும்
    நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
    சேமித்து வைத்திருக்கிறேன் என்
    சின்ன இதயத்தில்
    என்றாவதொருநாள் நினைத்து
    எனக்குள் நானே
    சிரித்துக் கொள்வதற்காய்.


    அட அட.. இப்போ நான் அப்படித்தான் சிரிக்கிறேன்

    ReplyDelete
  4. காரணமே இல்லாமல் கூட ஒருவரை ஒருவர் பார்த்துச் சிந்திவிட்டுப் போகும்
    சிரிப்புக்குத்தான் எத்தனை பரிதவிப்புகள்?

    ReplyDelete
  5. அதுவோர் காலங் கண்ணே
    எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான்மட்டும்
    இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
    புன்னகைப் பொற்கரங்கள்
    என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை
    ஒருவேளை
    முறைத்துக் கொண்டால்கூட
    அதுயார் முதலில்
    சிரித்துக்கொள்வதென்பதற்காகவே
    இருந்திருக்கும்.

    நான் மிகவும் ரசித்த வரிகள் .

    ReplyDelete
  6. உண்மையைச் சொல்
    > செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
    > சிரிப்பதற்கா? அல்லதெனைச்
    > சிலிர்ப்பூட்டுவதற்கா?


    யதார்த்தமான, மென்மையான கவிதை. வாழ்த்துகள் தங்க ராசா.

    ReplyDelete
  7. விலகிப் போனபின்னும்
    நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
    சேமித்து வைத்திருக்கிறேன் என்
    சின்ன இதயத்தில்
    என்றாவதொருநாள் நினைத்து
    எனக்குள் நானே
    சிரித்துக் கொள்வதற்காய். //

    எனக்கு இந்த வரிகள் ரொம்ப புடிச்சுருக்குங்க.....
    விலகிப்போனதும்...மனச ரணப்படுத்திக்கிட்டு இருக்கவங்க மத்தியில
    என்னைக்காவது நினைச்சு சிரிச்சுக்குவேன்னு சொல்லுறது
    ஒரு பாஸிடிவான விஷயம்...


    வாழ்த்துகள் ஜீவன்.....

    ReplyDelete
  8. விலகிப் போனபின்னும்
    நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
    சேமித்து வைத்திருக்கிறேன் என்
    சின்ன இதயத்தில்
    என்றாவதொருநாள் நினைத்து
    எனக்குள் நானே
    சிரித்துக் கொள்வதற்காய். //

    எனக்கு இந்த வரிகள் ரொம்ப புடிச்சுருக்குங்க.....
    விலகிப்போனதும்...மனச ரணப்படுத்திக்கிட்டு இருக்கவங்க மத்தியில
    என்னைக்காவது நினைச்சு சிரிச்சுக்குவேன்னு சொல்லுறது
    ஒரு பாஸிடிவான விஷயம்...


    வாழ்த்துகள் ஜீவன்.....

    ReplyDelete
  9. நன்றி கிரிஜா மணாளன்,
    உங்கள் உலகை மறக்கும் சிரிப்பினை கவிதையில் மட்டுமல்லாமல்
    வலைத்தளத்திலும் பார்த்தேன்.
    உங்கள் வலைத்தளம் காலத்தின் கட்டாயம். நம்மில் பெருப்பாலானோர் சிரிப்பதை
    ஒரு வேலையாகவே நினைக்கிறார்கள்.

    உண்மையைச் சொல்
    செவ்விதழ்களை நீ திறந்துகொள்வது
    சிரிப்பதற்கா? அல்லதெனைச்
    சிலிர்ப்பூட்டுவதற்கா?
    என்று ஒரு வேகத்தில் எழுதினேன். இருந்தும் அது உண்மை.
    வேர்த்துவிறுவிறுத்து படபடப்போடு அலுவலகம் விரைகையில் மெல்லிய
    பன்முறுவலோடு எதிர்ப்படும் முகம் சட்டென நம்மில் ஒரு சிலிர்ப்பை
    உருவாக்கிச் செல்வதை உணர்ந்திருப்பீர்கள்.
    தொடரட்டும் உங்கள் பணி.


    நன்றி பாஸ்கர் {?அனுபவம்}
    கவனம் சிவா அக்கம் பக்கம் பார்த்து அளவோடு சிரிங்கள்.
    புன்னகையின் ஒரு துளி இது ராஜா {?எந்த ஊருக்கு}
    நன்றி பூங்குழலி {நிறைய முறைத்துக்கொள்வீர்களோ?}
    நன்றி கோகுல் {சிலிர்ப்பூட்டியதா?}
    நன்றி நட்சத்திரா {விதிவிலக்கான ?நட்சத்திரம், எல்லா நேரமும்
    தெரிகிறதே?}


    அன்புடன் ஜீவன்.

    ReplyDelete
  10. அன்பின் ஜீவன்,

    கவிதை நன்றாக இருக்கிறது.



    >> விலகிப் போனபின்னும்


    நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
    சேமித்து வைத்திருக்கிறேன் என்
    சின்ன இதயத்தில்
    என்றாவதொருநாள் நினைத்து
    எனக்குள் நானே
    சிரித்துக் கொள்வதற்காய் >>

    பாராட்டுக்கள்

    ReplyDelete
  11. நல்ல ஒரு கவிதை படித்த மகிழ்ச்சி மனதில்


    வாழ்த்துக்கள் நண்பரே ...

    ReplyDelete
  12. நன்றி இனிய தோழன் விஷ்ணு ...
    உங்கள் வாழ்த்துரை உற்சாகமூட்டுகிறது.
    பாராட்டுக்களுக்கு நன்றி சக்தி
    அன்புடன்
    ஜீவன்

    ReplyDelete
  13. :)))


    > அதுவோர் காலங் கண்ணே
    > எல்லோருக்கும் விடிந்திருக்கும் நான்மட்டும்
    > இருட்டில் நடந்து கொண்டிருப்பேன் உன்
    > புன்னகைப் பொற்கரங்கள்
    > என்னிமைகளைத் தட்டித்திறக்காதவரை



    நன்று..

    ReplyDelete
  14. நல்ல "பா" நண்பர் ஜீவராஜ் . வாழ்த்துகள்

    ReplyDelete
  15. சிரித்தாள்
    சிரித்தேன்
    நான் மட்டும்
    சிரிப்போடு!!!
    நல்ல கற்பனை பாரட்டுக்கள்

    ReplyDelete
  16. நன்றி வெங்கடேசன் வாழ்த்துக்கு..

    ReplyDelete
  17. ஞாபகங்களின் மீட்டல்தான்
    இறக்கும் வரை இளைஞனாய்
    இருக்கும் வழி கி.ம
    நன்றி கோகுலன். { அதுவோர் காலம் }
    நன்றி nivedhida devi

    அன்புடன் ஜீவன்

    ReplyDelete
  18. //விலகிப் போனபின்னும்
    நீ சிந்திய எல்லாச் சிரிப்புகளையும்
    சேமித்து வைத்திருக்கிறேன் என்
    சின்ன இதயத்தில்
    என்றாவதொருநாள் நினைத்து
    எனக்குள் நானே
    சிரித்துக் கொள்வதற்காய்//

    ரொம்ப அழகான வரிகள்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  19. நன்றி அருணா அவர்களே

    ReplyDelete
  20. உண்மைதான் அண்ணன் இயல்பாய் அவளுகள் சிரிக்கிறதைப்பாக்கிறதே ஒரு சுகம்தான்...:)

    ReplyDelete
  21. பிரிவுகளின் பின்னரும் நல்ல நினைவுகளை தருவது பெண்களிடமே வாய்க்கிறதோ....

    ReplyDelete
  22. நன்றி தமிழன்-கறுப்பி...

    ReplyDelete
  23. உங்களுக்குத் தெரியாததா?
    நன்றி தமிழன்-கறுப்பி...

    ReplyDelete