Thursday, August 17, 2023

வருடங்கள் 15


இணையவெளியில் ஜீவநதி வலைமனையில் குடிபுகுந்து (13.08.2008) 15 வருடங்கள் ஆகிறது. வாசகர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பினாலும், உற்சாகமூட்டலாலும் என் எழுத்துக்கள் வருடம் தோறும் மெருகேறி வருவதை வரலாறாகக் காட்டுகிறது இந்த வலைமனை. உங்கள் அனைவரின் அன்புக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

ஒரு வலைப்பதிவரின் இலட்சியமான நூலாசிரியர் கனவு 2021, 2022 களில் பெரும் முயற்சியோடு ஈடேறியது. அச்சு நூல்களுக்கு தமிழ் சூழலில் இருக்கும் ஆதரவையும், வரலாற்றுப் புரிதலையும் சரிவரத் தெளிந்து கொண்டதால் மீளவும் 2023 இல் வலைப்பதிவராக மின்னூல் வெளியிடும் மனப்பக்குவம் ஏற்பட்டிருக்கிறது.

காட்சி வடிவங்களில் கட்டுண்டு இருக்கும் உலக வழக்கிற்கு ஏற்ப ஜீவநதியின் வலைப் பதிவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. வரும் காலங்களிலும் இதே போன்ற ஆதரவை வேண்டி நிற்கிறேன்.

நட்புடன் ஜீவன்.




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment