Thursday, June 25, 2009

பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE

இலங்கையில் வருடமொன்றுக்கு 600 க்கு மேற்பட்டோரைப் பலியெடுக்கும் ஒரு துர்நிகழ்வாக விசப்பாம்புக்கடி இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 11,000 மரணங்களும் , தெற்காசியாவில் 14,000 மரணங்களும் , உலகில் ஆண்டொன்றுக்கு 94,000 மரணங்களும் பாம்புக்கடியால் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உண்மையில் இந்த எண்ணிக்கை தொற்றுநோய்களால் ஏற்படும் மரணங்களை விட அதிகமானது என்பதும், அதுபற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை என்பதும் கசப்பான உண்மையாகும். இதனால் இது neglected tropical disease என்றழைக்கப்படுகிறது.

எனவே பாம்புக்கடி தொடர்பான முதலுதவி முறைகளை நாமனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகிறது. அவைபற்றி மிகச் சுருக்கமான விளக்கங்களைப் பார்ப்போம்.

ஒருவர் பாம்புக்கடிக்குள்ளானால் இயன்றவரை பாதிக்கப்பட்டவரை பதற்றமடையச் செய்யவேண்டாம். பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். எனவே மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும் என நம்பிக்கையளித்து அவரது பதட்டத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும்.

கடிபட்டவருக்கு எல்லாவகைப் பாம்புகளும் அபாயமானதல்ல என்று விளக்கவேண்டும். அத்துடன் கடிபட்ட அனைவருக்கும் விசம் ஏறி இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும் உறுதிபடத் தெரிவிக்க வேண்டும்.


காயத்தை சவர்க்காரமிட்டு ஓடும் நீரில் கழுவவேண்டும். காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம். கடிபட்ட பாகத்தை அசையாது வைத்திருந்தால் அது இரத்த ஓட்டத்தை மந்தப்படுத்த உதவம்.

முடிந்தால் பாம்பின் வகையை கேட்டறிந்து கொள்வது மருத்துவத்துக்கு உதவியாக இருக்கும்.



ஆபத்தான நான்கு நச்சுப்பாம்புகள்
நச்சற்ற பாம்புகள்:
  • சாரைப்பாம்பு
  • பச்சைப் பாம்பு
  • கொம்பேறி மூக்கன்

கடிவாயின் மீது கீறுவதோ,உறுஞ்சுவதோ, கட்டுவதோ தவிர்க்கப்படல் வேண்டும். கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கலங்கள் இறக்கக்கூடும். வாய்வைத்து உறிஞ்சும் போது வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.

ஆஸ்பிரின்” ,“மதுபானம்” என்பன கொடுத்தலைத் தவிர்க்க வேண்டும்.

உடன் வைத்தியசாலைக்கு கடிபட்டவரை கொண்டு செல்ல வேண்டும்.

சரியான முதலுதவிகள் செய்வதன் மூலமும், மருத்துவம் மூலமும் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புக்களைத் தவிர்க்க முடியும்.

த.ஜீவராஜ்

மேலும் வாசிக்க

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

15 comments:

  1. கடிபட்ட இடத்தை எப்படி அசையாமல் செய்வது?
    நகை மற்றும் இறுக்கமான ஆடைகளை அகற்றுதல் வேண்டும்
    நோ இருந்தால் பரசிட்டமோல் ஒரு டோஸ் கொடுக்கலாம்

    இவைகளும் சேர்க்கப் பட்டால் கொஞ்சம் மேலதிக தகவல்களாக இருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா .....

    சும்மா ஒரு கருத்துதான் , தப்பா நினைக்காதீங்க.

    ReplyDelete
  2. நன்றி மயாதி

    பாம்பு கொத்திய இடத்தைத் இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து வைத்திய சாலைக்குத் தூக்கிக் கொண்டோ அல்லது வாகனமூடாகவோ எவ்வளவு விரைவாகக் கொண்டு செல்லாலமோ அவ்வளவு நல்லது.

    ReplyDelete
  3. வைத்திய சாலையில் பாம்பு கடித்த நேரம் மற்றும் பாம்பின் விபரங்கள் தெரிந்திருப்பின் வைத்தியரிற்குத் தெரியப்படுத்தவும்

    ReplyDelete
  4. நல்லதொரு கட்டுரை.
    //த.ஜீவராஜ் said...
    வைத்திய சாலையில் பாம்பு கடித்த நேரம் மற்றும் பாம்பின் விபரங்கள் தெரிந்திருப்பின் வைத்தியரிற்குத் தெரியப்படுத்தவும்//

    முடியுமானால் கொத்திய அந்தப்பாம்பையும் பிடித்தோ அல்லது அடித்தோ கொண்டுபோவது நல்லதென்பார்கள். ஏனென்றால் அந்தப்பாம்பு எந்த வகையைச் சார்ந்தது என்று அறிந்தால் சிகிச்சை செய்ய உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  5. Ravimohan Ravimohan VelJun 25, 2009, 8:18:00 PM

    Very Informative.Thanks for useful information in Tamil.

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு..
    பகிர்ந்ததற்க்கு நன்றிங்ண்ணா!!

    ReplyDelete
  7. நன்றி துபாய் ராஜா அவர்களே

    ReplyDelete
  8. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வந்தியத்தேவன் அவர்களே

    ReplyDelete
  9. நல்ல தொகுபு.
    சுருக்கமா விளக்கத்தோடு சொல்லியிருப்பது நல்ல பலன்.
    உபயோகமான பதிவிது.

    ReplyDelete
  10. really great, would be helpfull for the First Aiders to motivate their activities

    ReplyDelete
  11. சுருக்கமான தெளிவான குறிப்பு. மிகவும் பயனுள்ளது.

    ReplyDelete
  12. நன்றி Ravimohan Ravimohan Vel அவர்களே

    ReplyDelete
  13. நன்றி
    @ கலையரசன்
    @ ஆ.முத்துராமலிங்கம்
    @ Nagu Mane

    ReplyDelete
  14. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
    அவர்களே

    ReplyDelete