Monday, December 01, 2008

பறிபோன இரவு

 இரவு
என் இன்றைய இரவும்
என்னுடையதாகவே இருந்திருக்கும்


I love you சொல்லி நீ
அசடு வழிந்திருந்தால் –என்
தப்பித்தல்கள் தாண்டி
இடித்துவிட்டு நீ
போயிருந்தால்

என் இன்றைய இரவும்
என்னுடையதாகவே இருந்திருக்கும்

அப்பா,அம்மாவின்
அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்
வீடுவரை பின்தொடர்ந்து
வீதிமுடிந்ததும் வெறுப்பேறி
என்பெயரை உன்னோடு இணைத்து
ஊருக்குள் என்தலைகுனிய
ஓலமிட்டுச் சென்றிருந்தால்

என் இன்றைய இரவும்
என்னுடையதாகவே இருந்திருக்கும்

இதேதுமின்றி
எங்கிருந்தோ வந்து
கொச்சைப்படுத்தாமல்
கூசும்படி சொல்லுரைக்காது
கூட்டத்தின் நடுவே
நானறியா வேளைதனில்
நழுவியிருந்த என் ஆடைதனை
ஏற்றிவிடும்படி
இங்கிதமாய் சொல்லிச் சென்றாயே
அப்போது நான் அறியவில்லை

இன்றைய இரவு
என்னிடம் இருந்து
பறிபோகும் என்பதை.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. hello jeevan i like ur poem i saw it is something true. im in canada but my birth place trincomalee.

    ReplyDelete
  2. வாருங்கள் ?Anonymous
    நம்ம ஊரா? நலமா ?

    ReplyDelete
  3. very very nice kavithai.viyanthen!
    keep it up.

    ReplyDelete
  4. நன்றி selvanambi
    உங்கள் கருத்துரை உற்சாகம் தருகிறது.....

    ReplyDelete