Monday, December 01, 2008

குட்டிக் கவிதைகள்

சமூகம்
தெய்வங்களின் 'ஊர்வலம்'தெருத்தெருவாய் வந்தது –மனித
உள்ளங்கள் ஒருமுகப்பட்டு
ஒன்றாகும் வரை.


**********
சண்டைகளுக்கு
சற்றுநேர ஓய்வு
சாதாரண மக்களுக்கு
மூச்சுவிடும் நேரம்
'யுத்த நிறுத்தம்'.
**********
எட்ட இருப்பதாய்த்தான் படும்
எந்த 'இலட்சியமும்' –நாமாகக்
கிட்டத்தே போகாதவரை.
**********
சரித்திரத்தில் சாதித்தவர்கள்
சரியாகத் தூங்கியதில்லை
உணர்ந்துகொள்
'உறங்காமலும் விடியும்'.
**********
உறவுகளில் விசித்திரம்
‘நட்பு’உருவாதல் எளிது
அதுபோல் உடைதலும்.
**********                                                                   த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

13 comments:

  1. //
    சரித்திரத்தில் சாதித்தவர்கள்
    சரியாகத் தூங்கியதில்லை
    உணர்ந்துகொள்
    'உறங்காமலும் விடியும்'.
    //

    நான் மிகவும் சுவைத்த வரிகள்.

    //
    உறவுகளில் விசித்திரம்
    ‘நட்பு’
    உருவாதல் எழிது
    அதுபோல் உடைதலும்.
    //

    எளிது என்று வரவேண்டுமோ?

    ReplyDelete
  2. நன்றி வருகைக்கும், பகிர்விற்கும்.

    எளிது என்று வரவேண்டுமோ?
    நன்றி திருத்தப்பட்டுள்ளது பதிவு.

    ReplyDelete
  3. //சரித்திரத்தில் சாதித்தவர்கள்
    சரியாகத் தூங்கியதில்லை
    உணர்ந்துகொள்
    'உறங்காமலும் விடியும்'.//

    அருமையான வரிகள் நண்பரே ..ரசித்தேன் ..
    பாஸ்கர் போலவே ..

    ReplyDelete
  4. //உறவுகளில் விசித்திரம்
    ‘நட்பு’
    உருவாதல் எளிது
    அதுபோல் உடைதலும்.//

    மிக சரியாக சொன்னீர்கள் ...

    ReplyDelete
  5. //உறவுகளில் விசித்திரம்
    ‘நட்பு’
    உருவாதல் எளிது
    அதுபோல் உடைதலும்.//

    மிக சரியாக சொன்னீர்கள் ...

    நன்றி விஷ்ணு வருகைக்கும், பகிர்விற்கும்.
    ///மிக சரியாக சொன்னீர்கள் ...///
    நிறைய அனுபவமா ??

    ReplyDelete
  6. அருமையான கவிதைகள்

    ReplyDelete
  7. நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  8. அத்தனையும் முத்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  10. சரித்திரத்தில் சாதித்தவர்கள்
    சரியாகத் தூங்கியதில்லை
    உணர்ந்துகொள்
    'உறங்காமலும் விடியும்'.//


    நல்ல கவிதைகள்.., எதையோ பூடகமாய்ப் புலப்படுத்துவதாய் உள்ளன....

    ReplyDelete
  11. சரித்திரத்தில் சாதித்தவர்கள்
    சரியாகத் தூங்கியதில்லை
    உணர்ந்துகொள்
    'உறங்காமலும் விடியும்'. இரசித்தேன். செறிவான வரிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே உங்களுக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete