Friday, December 05, 2008

எழுதப்படாத கடிதம்...

காதல்

எப்போதாவது தோன்றும்
இதயத்தைப் பிழிந்து
எடுத்த சாற்றில் -உனக்கு என்
உணர்வுகளை எழுதவேண்டும்
ஒருதரமாவது என்று


கடதாசி,
இடையில் நிக்காத எழுதுகோல்,
எவரும் குழப்பாத அதிகாலை நேரம்,
எழுதியதும் உள்ளுக்குள் அழுத்தி
ஒட்டிக்கொள்ள அஞ்சல்,
முத்திரை,
அனைத்துமே தயார்.

எல்லாம் இருந்தும்
எதுவுமே இயலவில்லை
நெஞ்சுக்குள் வலி
கண்களுக்குள் நீர்
கைகள் விறைத்துப்போய்- சுவரை
வெறித்துப்பார்த்தபடி கதிரையில் நான்.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. அவ்வப்போது இப்படித் தோன்றுவதுண்டு.....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  2. ///அவ்வப்போது இப்படித் தோன்றுவதுண்டு.....///

    நன்றி அருணா
    வருகைக்கும் ,பகிர்வுக்கும்

    ReplyDelete
  3. "நெஞ்சுக்குள் வலி
    கண்களுக்குள் நீர்
    கைகள் விறைத்துப்போய்- சுவரை
    வெறித்துப்பார்த்தபடி கதிரையில் நான்"

    துயர் நிறைந்த வரிகள். வாழ்த்துக்கள்.
    - சாந்தி -

    ReplyDelete
  4. நன்றி சாந்தி

    ReplyDelete