Tuesday, July 26, 2016

தம்பை போற்றும் தலைமகனாம் தமிழறிஞன் 'பொன் சித்திரவேல்'


தம்பலகாம மக்கள் தம்மை
தன்பா லிழுத்து கல்விதனை
ஓங்கி வளர வழி செய்த
உயர்ந்த மாமனிதரிவர்
தம்பை போற்றும் தலைமகனாம்
தமிழறிஞன் பொன் சித்திரவேல்
எம்மைப் பிரிந்து சென்றனனே!
இதயம் ஏங்கித் துடிக்கிறதே!


பொன்னம்பலத்தார் மகனாக
புவியில் வந்துதித்துலகோர்
எண்ணங்களில் சான்றோனாய்
இடம்பிடித்த மாமனிதன்!
கன்னம் குழிய முறுவவித்து
காண்போர் மெச்சும் வாலிபனாய்
இன்னும் எங்கள் இதயங்களில்
இருக்கும் சான்றோன் மறைந்தனனே !


அன்பால் மாணவச் செல்வங்களை
அணைத்துக் கல்வி ஊட்டியவர்
அதிபராகக் கடமை செய்து
அனைவரும் புகழ வாழ்ந்ததுடன்
வித்தியாலயம் விருத்தி பெற
வேண்டிய வகைகளில் வழி செய்து
நித்தம் உழைத்த பெருமகனார் !
நினைவில் நிறைந்த சித்திரவேல்


எழுத்துலகில் கால் பதிக்க
எனக்கு வழி காட்டியவர்
சிறந்த தமிழ் நூல்களைத்
தேடி தந்து உதவியவர்
பெருமை மிக்க சான்றோனாய்
பெரும் புகழோடு வாழ்ந்த என்
ஆசான் பாதம் தொழு தெழுந்து
ஆத்ம சாந்தியை வேண்டுகிறேன்.

-வேலாயுதம் தங்கராசா-



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்
    ஐயா
    ஆழ்ந்த இரங்கல்... ஆன்மாசாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete