அறிவாட்டி பூமகள் நரபலியானதைச் சொல்லி முடித்த கடைசி நிமிடங்களில் ஆதினி மூச்சு விடவும் மறந்து போயிருந்தாள். குளிரில் நனைந்த கோழிக்குஞ்சாக அறிவாட்டியின் மடியில் தஞ்சமாகி இருந்த ஆதினிக்கு அடுத்து என்ன நடந்தது என்று கேட்பதற்கே தயக்கமாக இருந்தது.
திடுக்கிட்டு எழுந்தேன். தலையை தடவிக் கொண்டிருந்த கனகவல்லிப் பாட்டி ஆதரவோடு என் தோள்களைப் பிடித்து அமரச் செய்தாள். பூக்கட்டிப் பாத்துட்டாங்களா பாட்டி என்று பயத்தோடு கேட்டேன்.
ம்...... நீ எழும்பிறதிற்கு கொஞ்சம் முதல்தான் பறையொலி பெரிசாக கேட்டது. பூக்கட்டி பார்த்துட்டாங்கண்ணு நினைக்கிறன்.