Tuesday, July 26, 2016

தம்பை போற்றும் தலைமகனாம் தமிழறிஞன் 'பொன் சித்திரவேல்'


தம்பலகாம மக்கள் தம்மை
தன்பா லிழுத்து கல்விதனை
ஓங்கி வளர வழி செய்த
உயர்ந்த மாமனிதரிவர்
தம்பை போற்றும் தலைமகனாம்
தமிழறிஞன் பொன் சித்திரவேல்
எம்மைப் பிரிந்து சென்றனனே!
இதயம் ஏங்கித் துடிக்கிறதே!

Wednesday, July 20, 2016

நூலக ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.org


இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும், அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி www.noolaham.orgநூலக நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணப்படுத்தலுக்குக்கான உதவிக் கோரிக்கை கீழே.