Saturday, May 07, 2016

இன்றைய வீரகேசரி (07.05.2016 ) சங்கமம் பகுதியில் எனது நேர்காணல்... நன்றி திரு.சஞ்சீவன்



01.உங்களைப் பற்றியும் உங்களது இலக்கியப்பின்ணணி பற்றியும் கூறமுடியுமா ?

தம்பலகாமத்தில் பிறந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் நான் மருத்துவராகப் பணிபுரிகிறேன். எழுத்தாளராகவும், நீண்டகாலமாக வீரகேசரி நாளிதழின் நிருபராகவும் கடமையாற்றி மறைந்தவர் எனது அப்பப்பா தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள். அவரது தூண்டுதலினால் சிறுவயதில் வாசிப்பதிலும் பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை கலாபூசணம் வே. தங்கராசா அவர்களின் உறுதுணையுடன் அது இன்றுவரை தொடர்கிறது. பாடசாலைக் காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த எழுத்துலகப் பயணம் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கிய மலர்கள் என்று நீண்டு செல்கிறது. 

Wednesday, May 04, 2016

ஆதவன் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பு - புகைப்படங்கள்


அண்மையில் எனது மைத்துனர்  திரு.தி.ஸ்ரீபதி (திருகோணமலை மாவட்ட கடல்சார், சூழல் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பாளர்  ) அவர்கள் தனது வேலை நிமிர்த்தமாக சீனன்வெளி ஆதவன் வித்தியாலயத்திற்குச் சென்றிருந்தபோது பாடசாலை அதிபர் திரு.இலிங்கேஸ்வரன் அவர்களினால் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி கீழ்வரும் பொருட்கள் நன்கொடையாகக் கோரப்பட்டன.

“இலக்கியப் பூக்கள் - 2 ” - தொகுப்பாசிரியர் முல்லை அமுதன்


இங்கிலாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் “முல்லை அமுதன்” அவர்கள் தொகுத்தளித்திருக்கும் “இலக்கியப் பூக்கள் ” என்னும் நூலின் இரண்டாவது தொகுதி சென்னை “காந்தளகத்தின்” தயாரிப்பில் வெளிவந்திருக்கின்றது.