Friday, March 28, 2014

அமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் அவர்களின் நினைவுப் பேருரை 30.03.2014

அமரர் பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் (07 .12. 1929 - 27 02.2014)  ஈழத்தில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். அவரது நினைவுப் பேருரை தொடர்பான அழைப்பிதழ்.

Wednesday, March 26, 2014

பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2' - புகைப்படங்கள்


இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் எதிர்வரும் 04.04.2014 அன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள புத்தக வெளியீட்டில் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2  வெளியிடப்பட இருப்பதாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தெரிவித்தார்.

Tuesday, March 25, 2014

காணாமல் போகும் கடற்கரைகள் - சல்லி - புகைப்படங்கள்

காணாமல் போகும் கடற்கரைகள்

திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுள்ள அழகிய கடற்கரைக் கிராமம் சல்லி. இங்குள்ள கல்லணையைத் தாண்டிச் சீறும் கடல் அலைகளால்  காணாமல் போகும் கடற்கரைகளின் புகைப்படங்கள் இவை.

Monday, March 24, 2014

காற்றுவெளி மின்னிதழுக்குரிய தங்களின் படைப்புக்களை அனுப்பி சிறப்பியுங்கள்

காற்றுவெளி


வணக்கம்.
இலண்டனை தளமாகக்கொண்டு மாதம் தோறும் வெளிவரும் இணைய சஞ்சிகை காற்றுவெளி. காற்றுவெளி மின்னிதழுக்குரிய படைப்புக்களை அனுப்பி உதவுங்கள். நண்பர்களுக்கும் காற்றுவெளியை அறிமுகம் செய்து வையுங்கள். இலக்கிய,அறிவியல்,சமயக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. எழுதுபவர்கள் A 4 அளவிலான 4 பக்கங்களுக்கு அதிகமில்லாமல் எழுதுங்கள்.

Thursday, March 13, 2014

"நிலாவெளி - வரலாறும், பண்பாடும்" நூல் வெளியீட்டு விழா

நிலாவெளி - வரலாறும் பண்பாடும்

நிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்

THE MOTHER GODDESS OF NILAAVELI

திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்று மூலங்களில் நிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்தெய்வ உருவகம் குறிப்பிடத்தக்கதாகும். புதுடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவ்வரிய பொக்கிசம் திருகோணமலையில் அன்னை வழிபாட்டின் தொன்மைக்கான ஆதாரமாகும். சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் ( Dr.J.T.XAVIER - MBBS, FRCS ) அவர்கள் இது இந்துவெளி நாகரீக காலத்திற்கு உரியதெனக் கருதுகிறார்.

Tuesday, March 04, 2014

சிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா


கண்ணகிக்கு விழா எடுக்கும் கள்ளிமேட்டில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். வருடா வருடம் இக்கோயிலில் தீ மிதிப்பு வைபவம் மிகச் சிறப்பாக இடம்பெறும். இக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது சிறுகதை ஆசிரியை திருமதி முகுந்தன் கவிதா அவர்களின் பெற்றோர்களின் வீடு.