ஒப்பறேசன் என்றவுடன் உடல் நடுங்கி
ஒடுங்கிப்போய்க் கிடந்தவன் உளந்திருந்தி
துடிப்போ டெழுந்திருந்து துயரைப் போக்கி
சுறுக்காக யாழ்ப்பாணம் சென்று ஆங்கே
எடுப்பாக ‘இருபத்தேழாம் வாட்டில்’ சேர்ந்தேன்
என்னோடு பல நூறு நோயாளர்கள்
‘எதர்க்கும்’ அஞ்சாத மன நிலையில்
இருக்கின்ற காட்சி கண்டு இதயம் நொந்தேன்.